RAMesh
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Monday, March 28, 2016
Saturday, July 28, 2012
மனிதனுக்கு புகழ்
வினா: சுவாமிஜி, மனிதனுக்கு புகழ் எவ்வாறு கிடைக்கும் ?
மகரிஷியின் விடை:
மனிதன் எவ்வளவு தெரிந்து கொண்டிருக்கிறான் என்பதில் புகழ் இல்லை. என்ன
நல்ல செயல்களை சமுதாயத்திற்கு செய்து கொண்டிருக்கிறான் என்பதில் தான் புகழ்
இருக்கிறது. புகழ் என்பது தன்முனைப்பிற்கு போடும் தூபம் அல்ல. நற்செயலின்
விளைவினால் பயனடையும் மக்கள் அன்போடு கொடுக்கும் மதிப்புணர்வே புகழாகும்.
நீங்கள் புகழைத் தேட முயற்சித்தீர்களானால் அந்த வேட்பே புகழ் உங்களை
அணுகாமல் துரத்தும் சக்தியாகும்.
Friday, November 11, 2011
Thought for the day - 11.11.11
The benefits of Nature are all over the Universe but the secrets of Nature are only within your own Mind. Go in and in to get more and more
No one can take away from you what Providence has allotted for you
The husband-wife relationship is divine; no other can equal it in its depth and intensity, because only in this relationship the union of souls occur
Vegetarianism is the only way of life based on the observance of non-violence. Non-violence is a method of living without hurting, torturing or killing any living being for one's own enjoyment
No success overcomes on its own. Behind every success there are untold stories of trials, failures, losses, humiliations and miseries
Giving up and giving up whatever is not wanted whether it is men, material, action or enjoyment, its the method of purification and enlightenment
Wednesday, July 27, 2011
இரண்டொழுக்கப் பண்பாடு
Tuesday, May 3, 2011
Uses of Introspection (அகத்தாய்வுப் பயிற்சிகள்)
தவத்தால் மனஅமைதியும், இறைநிலையே தானுமாகவும், தன்னுடன் வாழும் மனிதர்களாகவும் பிற உயிரினங்களாகவும் சடப்பொருட்களாகவும் இருப்பதை உணர்ந்து தெளிந்த நிலை உண்டாகிறது. யாரொருவருக்கும் துன்பம் செய்யாமலும், துன்பப்படுபவர்களுக்கு இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்ற அன்பும், கருணையும் உள்ளத்தில் உருவாகிறது.
தவத்தின் பயனால் இந்த விளக்கங்களை மனிதன் பெற்றாலும், விளங்கிய வழி வாழ முடியாமல் தத்தளிக்கின்றான். இதற்குக் காரணம் பலப்பல பிறவித் தொடர்களாக மனிதன் உணர்ச்சிவய நிலையிலிருந்து புலன் வழி பெற்ற பழக்கப்பதிவுகளே ஆகும். இப்பழக்கப் பதிவுகளிலிருந்து தன்னை விடுபடுத்திக் கொண்டு விளக்க வழியில் தான் உணர்ந்தவாறு தனக்கும் பிறருக்கும் நன்மையே செய்து வாழும் நிலை வேண்டுமென்றால், அதற்கும் முறையான பயிற்சி தேவைப்படுகிறது.
தன்னிடம் உள்ள குறைகளை போக்கிக் கொண்டு, பிறருக்கும் நன்மையே செய்யும் அறவழி வாழ தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களால் உருவாக்கப்பட்ட பயிற்சி முறைகளே அகத்தாய்வு பயிற்சிகளாகும்.
அகத்தாய்வு பயிற்சிகளில்
எண்ணம் ஆராய்தல்
ஆசை சீரமைத்தல்
சினம் தவிர்த்தல்
கவலை ஒழித்தல்
நான் யார்?
என்ற தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சிகளை கற்றுக் கொண்டு அதன்படி வாழும்பொழுது குணநலப்பேறு என்ற சிறந்த பண்பினை ஒவ்வொருவரும் அடைய முடியும்.
நம்மிடம் உள்ள தீய வினைப் பதிவுகள் காரணமாக ஒவ்வொரு மனிதனிடமும் ஆறு வேண்டாத குணங்கள் உள்ளன. அவை பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வுதாழ்வு மனப்பான்மை, வஞ்சம் அதாவது காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகும்.
அகத்தாய்வு பயிற்சிகள் மூலம் :
பேராசையை – நிறைமனமாகவும்
சினத்தை – சகிப்புத்தன்மையாகவும்
கடும் பற்றினை – ஈகையாகவும்
முறையற்ற பால் கவர்ச்சியை – கற்பாகவும்
உயர்வு தாழ்வு மனப்பான்மையை – சமநோக்காகவும்
வஞ்சத்தை – மன்னிப்பு ஆகவும்
மாற்றி மனிதநேயம் மலர்ந்து எல்லோரோடும் இணக்கமாக வாழலாம்.
சமுதாயத்திலே நாம் வாழும்போது பிறருடன் தொடர்பு கொண்டுதான் வாழ்ந்தாக வேண்டியுள்ளது. அவர்களுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு இனிமையாக அமையும் அளவில்தான் வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும் நிலவும். அந்த இனிமையான உறவு அமைய பிறரை வாழ்த்துகின்ற பழக்கம் அவசியம். அந்த வகையில்தான் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு தாரக மந்திரமாக வாழ்க வளமுடன் என்ற வாழ்த்தும் முறையை தந்துள்ளார்கள்.
அமைதியான மனநிலையில் பிறரை வாழ்த்தும் போது எல்லோரோடும் இணக்கமான உறவு ஏற்படும். கருத்து வேறுபாடு உள்ளவர்கள் கூட மனமாற்றம் பெற்று நண்பர்களாகி விடுவார்கள்.
– தத்துவஞானி ஸ்ரீ வேதாத்திரி மகரிஷி
Tuesday, March 29, 2011
மனைவி நல வேட்பு நாள்-Wife's Appreciation Day
உலகில் இதுவரை தந்தை நாள் (Father's day), தாயார் நாள் (Mother's day) தனித்தனியே கொண்டாடுகிறார்கள். சுமங்கலி பூஜை என்றளவிலே கணவன் நல வேட்பு நாளும் கொண்டாடுகின்றார்கள். மனைவி நல வேட்பு நாள் எந்த ஊரிலேயும் இல்லை. இது ஒரு நன்றி கெட்டதனம் இல்லையா? இது என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. ஆனாலும், ஒருவர் தலையிட்டுச் செய்தால் மட்டும் போதாது. இது நாடு முழுவதும் ஆண் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
பெண்மையின் பெருமையை உணர வேண்டும் என்ற மனதோடு ஆராய்ச்சி செய்த போது இந்த ஆண்டு என் மனைவியினுடைய (அருள் அன்னை லோகாம்பாள்) பிறந்த நாள் 30.8.ல் வந்தது. அன்பர்களிடம் சொன்னேன். என் மனைவியின் பிறந்த நாளையே வைத்துத் தொடங்கி மனைவி நல வேட்பு நாள் கொண்டாடலாம். இதையே வைத்துக் கொண்டு, இது முதல் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 ஆவது நாளை மனைவி நல வேட்பு நாளாகக் கொண்டாடுவது நம் சங்கத்தின் வழக்கமாக வரட்டும். பிறகு உலக நாடுகளிலும் பரவட்டும் என்றேன். ஆண்களும், பெண்களும் உற்சாகமாக அதை ஏற்றுக் கொண்டு பல இடங்களில் கொண்டாடுகிறார்கள். நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையை நன்றியோடு வாழ்த்தி இக்கவியைச் சொல்லி மகிழுங்கள்.
"பெற்றோரைப் பிறந்தகத்தைப் பிறந்த ஊரை விட்டுப் பிரிந்து வந்து, பெருநோக்கில் கடமையறம் ஆற்றப், பற்றற்ற துறவியெனக் குடும்பத்தொண்டேற்றுப் பண்பாட்டின் அடிப்படையில் எனைப் பதியாய்க் கொண்டுஎன் நற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகிப் பெண்மை நல நோக்கில் அன்போடு கருணை இவை கொண்டு மற்றவர்க்கும் தொண்டாற்றும் மாண்புமிக்க எந்தன்
When I was introspecting that everyone should understand the greatness of womanhood, the birthday of my wife (Divine mother Logambal) for this year, approached on 30th August. I told all my friends that we could start celebrating wife's welfare day on the birthday of my wife. Henceforth let it be a practice in our organisation to celebrate the wife's welfare day on August 30th; then let it spread all over the world, I said. All men and women have accepted this enthusiastically and are celebrating it in many places. You may also bless your life partner with gratitude and recite this poem.
"Leaving her parents, home born and place of birth, she came with a great vision of performing her duty, like a dispassionate sage, to serve the family on the basis of tradition and culture, having me as her husband; due to my boon, has become my life partner with all good qualities of womanhood, serving others also with love and grace, honorable is my wife, I appreciate and - Vethathiri Maharishi
Tuesday, February 23, 2010
கீதாசாரம்
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.